Thursday, 7 February 2013

Kannadasan poem


அனுபவமே கடவுள்  

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் 
பிறந்து பாரென இறைவன் பணித்தான்! 

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் 
படித்துப் பாரென இறைவன் பணித்தான்! 
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் 
அறிந்து பாரென இறைவன் பணித்தான்! 
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் 
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! 
பாசம் என்பது யாதெனக் கேட்டேன் 
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! 
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் 
மணந்து பாரென இறைவன் பணித்தான்! 
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் 
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! 
முதுமை என்பது யாதெனக் கேட்டேன் 

முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! 
வறுமை என்பது என்னெனக் கேட்டேன் 
வாடிப் பாரென இறைவன் பணித்தான்! 
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் 
இறந்து பாரென இறைவன் பணித்தான்! 
'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் 
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்! 
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!



பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 
கருடா சௌக்கியமா 
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 
கருடா சௌக்கியமா 
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் 
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. 
அதில் அர்த்தம் உள்ளது.. 

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது 
உலகம் உன்னை மதிக்கும் 
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் 
நிழலும் கூட மிதிக்கும் 
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது 
உலகம் உன்னை மதிக்கும் 
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் 
நிழலும் கூட மிதிக்கும் 
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று 
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது 
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது 

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 
கருடா சௌக்கியமா 
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் 
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. 
அதில் அர்த்தம் உள்ளது.. 

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் 
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் 
எந்த வண்டி ஓடும் 
உனை போலே அளவோடு உறவாட வேண்டும் 
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது 
அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது 

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 
கருடா சௌக்கியமா 
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் 
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. 
அதில் அர்த்தம் உள்ளது.. 

நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே 
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே 
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே 
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே 
என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது 
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது 
இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது 

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 
கருடா சௌக்கியமா 
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது 
கருடா சௌக்கியமா 
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் 
எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. 
அதில் அர்த்தம் உள்ளது..







No comments:

Post a Comment