Thursday, 7 February 2013

பாரதிதாசன் கவிதை


                                அழகின் சிரிப்பு  



சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; 
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து 

நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில் 
நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள் 
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் 
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய் 
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என் 
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்! 




                                           கல்வி 

கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே 
கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே! 
செல்வம் பிறக்கும் நாம் தந்திடில் தீர்ந்திடும் 
கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும்

கல்வியுள்ளவரே! கண்ணுள்ளார் என்னலாம் 
கல்வியில்லாதவர் கண் புண்ணென்றே பன்னலாம் 
கல்வி மிகுந்திடில் கழிந்திடும் கடமை! 
கற்பதுவேஉன் முதற் கடமை

இளமையிற் கல்லென இசைக்கும் ஒளவையார் 
இன்பக் கருத்தை நீ சிந்திப்பாய் செவ்வையாய் 
இளமை கழிந்திடில் ஏறுமோ கல்விதான்? 
இப்பொழுதே உண் இனித்திடும் தேன்



                                                                                       -பாரதிதாசன் 


No comments:

Post a Comment